sent_token
stringlengths
1
79k
அதைப்பற்றிக் கிழவிக்கென்ன கவலை ?
கிறிஸ்மஸ்உக்கு இரண்டு நாட்களுக்குமுன் அழகம்மாளைச் சர்க்கார் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு அந்தப் பிரிவைத் தாங்க முடியாமல் கண்ணைத் துடைத்துக்கொண்டு திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு தனியே வந்தாள் கிழவி.
அழகம்மாளோ ஆஸ்பத்திரி பெஞ்சின் மீது எங்கோ வெறித்த பார்வையுடன் சலனமின்றி உட்கார்ந்திருந்தாள்.
கொஞ்ச நாளாகவே அவள் நிலை அப்படித்தான் இருந்தது.
கிறிஸ்மஸ்உக்குள் குழந்தை பிறந்துவிடும்... குழந்தைக்கு ஒரு புதுச் சட்டை தைக்கணும் என்று நினைத்த கிழவிக்கு ஆனந்த மேலீட்டால் உடல் பதறிற்று.
கர்த்தரை ஜெபிக்கும் உதடுகள் துடித்தன.
உடலில் சிலுவைக் குறி இட்டுக்கொள்ளும்போது விரல்கள் நடுங்கின.
மாலை மணி நாலுக்கு பிரசவ வார்டில் பேச்சும் கலகலப்புமாக இருந்த நேரத்தில்பக்கத்தில் இருந்த குழந்தை வீல் வீல் என்று அலறும் சப்தத்தில் கண் விழித்தாள் அழகம்மாள்.
ஆமாம் விடியற்காலை நேரத்தில் கிறிஸ்மஸ் தினத்தன்று அவளுக்குக் குழந்தை பிறந்திருந்தது ஆண் குழந்தை கழுத்தில் கிடக்கும் ரோஜா மாலை சரிந்து கிடப்பது போல் அந்தப் பச்சைச்சிசு அழகம்மாளின் மார்போடு ஒட்டிக் கிடந்தது.
அழகம்மாளின் பார்வை ஒரு வினாடி குழந்தையை வெறித்துச் சுற்றும் முற்றும் பரக்கப் பரக்க விழித்துச் சுழன்றது.
ஆமாம் இது என் குழந்தைதான்...என் மகன் தான்.
குழந்தையை எடுத்து மார்பில் அணைத்துத் துணியால் மூடிக் கொண்டாள்.
பையனைப் பாரு அப்பிடியே அப்பனை உரிச்சிக்கிட்டு வந்திருக்கான் என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் அழகம்மாள்.
அடுத்த கட்டிலினருகே ஒரு கிழவியும் இளைஞனும் நின்றிருந்தனர்.
ஒவ்வொரு கட்டிலினருகிலும் ஒவ்வொரு அப்பன் தன் குழந்தையைப் பார்க்க வந்து நின்றிருக்கிறானே...என் குழந்தையைப் பார்க்க அவன் அப்பன் ஏன் வரவில்லை என் மகனுக்கு அப்பன் எங்கே ?
அவன் எப்பொழுது வருவான் ?
கண்ணில்படும் ஒவ்வொரு மனிதனையும் உற்று உற்றுப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள் அவள்.
ஏண்டா அழறே ?
உன்னைப் பார்க்க உன் அப்பா வரலேன்னு அழறியா ?
இரு இரு நான் போயி உன் அப்பாவைக் கூட்டியாறேன் என்று குழந்தையை எடுத்துப் படுக்கையில் கிடத்தினாள் அழகம்மாள்.
கிறிஸ்மஸ்உக்காகக் குழந்தைக்குச் சட்டை தைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்த ஆரோக்கியத்திற்குத் தலையில் இடி விழந்தது போலிருந்தது.
கிழவி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டாள்.
அப்பொழுது திடாரென அவளுக்கு முன்பொரு நாள் அழகம்மாள் காணாமற் போய்க் கண்டுபிடித்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.
உடனே எழுந்து மாதாகோயில் சாலையிலிருக்கும் அந்த இரட்டை மரத்தை நினைத்துக்கொண்டு ஓடினாள்.
ஆனால்... ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்ததும் அதற்குமேல் நகர முடியாமல் திகைத்து நின்றாள் கிழவி.
எதிரிலிருக்கும் பஸ் ஸ்டாண்டில் நின்றிருக்கும் அழகம்மாளைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் விளைந்த திகைப்பா ?
பிச்சையா கேட்கிறாள் ?
என்ன பிச்சை ?
கிழவி மகளை நெருங்கி ஓடினாள்.
அதற்குள் அழகம்மாள் சற்றுத் தள்ளி நின்றிருந்த இன்னொரு இளைஞனை நெருங்கி என்னவோ கேட்டாள்.
அவள் குரல் இப்பொழுது கிழவியின் செவிகளுக்குத் தெளிவாகக் கேட்டது.
என்னாங்க...என்னாங்க....உங்க மகனைப் பார்க்க நீங்க ஏன் வரலை ?....
அப்பாவைப் பார்க்காம அவன் அழுவுறானே.... வாங்க நம்ப மகனைப் பாக்க வாங்க.... என்று அந்த வாலிபனின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுகிறாள்.
அவன் பயந்து போய் விழிக்கிறான்.
திரும்பி பார்த்த அழகம்மாள் கிழவியை அடையாளம் கண்டு கொள்ளாமல் விழித்தாள்.
என் குழந்தைக்கு அப்பா எங்கே அப்பா ?
அந்த ஒரே கேள்விதான் நீ வாடி கண்ணே என்னோட....இதோ பாத்தியா உன் மகனுக்குப் புதுச்சட்டை என்று மடியில் வைத்திருந்த சட்டையை எடுத்துக் காண்பித்தாள் கிழவி.
அழகம்மாள் ஒரு வினாடி சட்டையை உற்றுப் பார்த்தாள் நல்லா இருக்கு பையனுக்குப் போட்டுப் பார்ப்பமா ?
என்றாள் புன்னகையுடன்.
அடுத்த நிமிஷம் அவள் முகம் வாடிக் கறுத்தது.
மகளே உனக்குத் தெரியலியா ?
முன்னே எல்லாம் நீ சொல்லுவியே தேவன் னு....அந்த தேவன்தான் இப்ப வந்து உன் வயித்திலே மகனாப் பிறந்திருக்கான்.... ஆமாண்டி கண்ணே இன்னொரு விஷயம் உனக்குத் தெரியுமா... கர்த்தருக்குக் கூட அப்பா கிடையாது.... நீ கவலைப்படாதே மகளே அழகம்மாளின் பார்வை உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆணும் என் குழந்தைக்குத் தகப்பன்தான் என்று கூறுவது போல் எதிரில் வரும் மனிதர்கள் நடுவே தன் குழந்தைக்கோர் அப்பனைத் தேடி அலைந்து கொண்டுதான் இருந்தது.
தேவனே எதிரில் வந்திருந்தால் கூட அவளால் அந்த ஒரே கேள்வியைத்தான் கேட்க முடியும் என் குழந்தைக்கு அப்பா எங்கே அப்பா ?
குறிப்பு நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது.
வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை.
இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும்.
அவற்றை நீக்கிவிடுகிறேன்.
படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம்.
அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும்.
நன்றி.
இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம்.
ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது.
மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது.
அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை.
.. என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது.
எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன் அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது முக்கியமான சிறுகதைகள்.
கட்டுரைகள்.
நேர்காணல்கள்.
உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது.
அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன் அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.
எஸ் ராமகிருஷ்ணன் சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் மகாகவி நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ... தென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று கோடையும் கடுமையாகக் கண்டது.
சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன.
நான் குடியிருந்த விடு... பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி.
முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள்.
அப்போது காலையில் வேலை ... இரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது.
நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்... உங்களுடைய மேலான கருத்துகள் ஆலோசனைகள் எழுத்தாளர்களின் படைப்புகள் எதிர்வினைகளை .
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
மொழி.
சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள் கிறிஸ்தவ பாடல்கள்கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்
சிறுமியை தூக்கிக்கொண்ட இந்திய அணியின் கேப்டன்.. உலக கிரிக்கெட் அரங்கில் கிடைத்த உச்சபட்ச கவுரவம் மிரள வைக்கும் காட்சி.
சுழிபுரம் காட்டுப்புல சிறுமி கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் இன்னமும் கைது செய்யப்படாமையால் சுதந்திரமாக நடமாடி திரிவாதாக சிறுமியின் உறவினர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி கே.சுகாஸ் மன்றில் தெரிவித்தார்.
யாழ்.சுழிபுரம் காட்டுபுலம் பகுதியை சேர்ந்த ஆறுவயது சிறுமி ஒருவர் பாடசாலை விட்டு வீடு திரும்பும் போது கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்த பின்னர் கிணற்றில் சடலமாக வீசப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை காவல்துறையினர் சந்தேகத்தில் மூவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
அந்நிலையில் குறித்த வழக்கு இன்று புதன்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதவான் ஏ.
ஏ.
ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது சந்தேகநபர்கள் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே சட்டத்தரணி அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி பாடசாலைக்கு தேங்காய் கொண்டு வந்ததாகவும் அந்த தேங்காயை சிறுமி படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் வைத்து சில இளைஞர்கள் உடைத்து உண்டு கொண்டு இருந்ததை கண்டதாகவும் சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் சில இளைஞர்கள் நின்றதை கண்டதாவும் சிறுவன் ஒருவன் கூறினார் என மன்றில் சட்டத்தரணி தெரிவித்தார்.
எனவே இக் கொலை தொடர்பில் உரிய விசாரணைகளை துரித கதியில் மேற்கொண்டு வெளியில் சுதந்திரமாக நடமாடி திரியும் குற்றவாளிகளை காவல்துறையினர் விரைந்து கைது செய்ய வேண்டும்.
என மன்றில் விண்ணப்பம் செய்தார்.
அதனை ஆராய்ந்த மன்று குறித்த வழக்கு தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு அறிவுறுத்தியதுடன் குறித்த வழக்கினை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.
அன்றைய தினம் வரையில் சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.
இன்று நமது நாட்டில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பென்பது தன்னார்வ குழுக்களின் அரசியல் சார்பற்ற பணிகளாக கருதப்படுவது பரவலாக உள்ளது.
சுகாதாரமற்ற மக்கள் தாங்களாக திருந்தி சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்குமளவிற்கு உயர்த்திட இதுதான் வழியென்று ஆளுவோரும் அதிகாரிகளும் பறைசாற்றுவதையும் காணலாம்.
இதே கும்பல் சுத்தமும் அசுத்தமும் பண்பாட்டு சமாசாரம் என்று ஒரு தத்துவத்தையே முன்வைப்பர் இந்த தன்னார்வ குழுக்களும் அவர்களின் கொடையாளிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கோடு இயங்குவதால் ஒருதலைப் பட்சமான கருத்துக்களே மக்களை சென்றடைகிறது.
விஞ்ஞான உலகில் நடைபெறும் சர்ச்சைகளை மக்களிடம் கொண்டு செல்லும் கடமையை பத்திரிகைகளும் மீடியாக்களும் சரிவர செய்வதில்லை.
கருத்துக்களை சீர்தூக்கி பார்க்கும் ஆற்றலை மக்கள் சங்கடங்களை சந்தித்து சொந்த அனுபவத்தின் மூலமே பெறும் நிலை இன்று உள்ளது.
லாபத்தை பணமாக குவிக்க வேண்டும் என்ற வெறியில் முதலாளிகளே திருப்பூர் முதல் திண்டுக்கல் வரை நிலத்தடி நீர் ஆற்று நீர் குளத்து நீர் அனைத்தும் கெடும் தொழில் நுட்பத்தை கையாண்டனர்.
பெயரளவிற்கு இருக்கும் மாசுகட்டுப்பாடு சட்டம் ஊழல் மலிந்த ஆட்சியாளர்கள் கண்டும் காணாமல் இருக்க வழிவகுத்தது.
எல்லா நீரும் கெட்டு கையை மீறி போனபின் நீதிமன்றத் தீர்ப்பால் அரசு தொழில்களை மூடியது.
தொழிலாளர்களை தெருவிலே நிறுத்தியது.
நீரையும் நிலத்தையும் கெடுக்காத தொழில் நுட்பங்களுக்கு இப்பொழுது பஞ்சமில்லை.
அவைகளை பெற அரசும் முதலாளிகளும் அக்கறை காட்டவில்லை.சுற்றுப் புறச் சூழல் கெட்டால் தானும் வாழ முடியாது என்ற உணர்வற்ற ஜடங்களாக ஆளுவோரும் முதலாளிகளும் இருந்ததினால்தான் சங்கடங்கள் நேர்ந்தது என்பதை பின்னர்தான் மக்கள் பார்க்க நேர்ந்தது.
எனவே சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்பது ஆளுவோரின் அரசியலோடும் அணுகுமுறைகளோடும் சம்பந்தப்பட்டதாகும்.
இது பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தீர்மானம் சுருக்கமாக ஆனால் தெளிவாக கட்சியின் நிலைபாட்டை 18வது மாநாட்டில் முடிவு செய்துள்ளது.
அரசியல் தீர்மானத்தின் 2.48 பாரா காடு அழிவது மண்வளம் குன்றுவது காற்று கெடுவது போன்ற கேடுகளை பட்டியலிட்டு இதனை திருத்திட அரசின் அணுகுமுறை என்னவாக இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது.
எந்த தீர்வும் மக்கள் நலனை மையமாக கொண்டிருக்க வேண்டும் என்கிறது.
காடு அழிவதை தடுப்பதாக கூறி காட்டை நம்பி வாழும் மக்களை அடித்து துரத்தக் கூடாது.
அதற்குப் பதிலாக காட்டை மெட்டை அடிக்கும் காண்டிராக்டர்கள் மீதும் அவர்களது பாதுகாவலர்கள் மீதும் அரசு பாய வேண்டும் என்கிறது.